பதிவு செய்த நாள்
03
அக்
2015
12:10
கரூர்: கரூர், புனித தெரசம்மாள் ஆலய தேர்த்திருவிழா, 2.10.15-ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கரூரில், பிரசித்தி பெற்ற புனித தெரசம்மாள் ஆலய தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு, 85வது தேர்த்திருவிழா காலை, 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு, 3.10.15 முதல் வரும், 10ம் தேதி வரை தினசரி மாலையில் ஜெபமாலை, திருப்பலி, புனிதையின் நவநாள், நற்கருணை ஆராதனை, வேண்டுதல் தேர் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 11 ம் தேதி காலை, 6 மணிக்கு திருப்பலி, 10 மணிக்கு வேண்டுதல் திருத்தேர் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு புனிதையின் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
தொடர்ந்து, நன்றி ஆராதனை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை பங்கு தந்தை ராயப்பன் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.