Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... சென்னை நவராத்திரி விழா துவக்கம்! சென்னை நவராத்திரி விழா துவக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்ஸ் நாட்டினரை கவர்ந்த ராமநாதபுரம் மூலிகை ஓவியங்கள்: 300 ஆண்டு கடந்தும் பொலிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2015
01:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் 300 ஆண்டுகளாக மூலிகை ஓவியங்கள் புதுப்பொலிவுடன் காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன. இவற்றை பார்வையிட பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் வருகின்றனர்.ராமநாதபுரத்தை ஆட்சி செய்த விஜயரகுநாத சேதுபதி கலை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கடந்த 1711 ம் ஆண்டில் அரண்மனையின் தர்பார் ஹாலை கோயில் வடிவில் கட்டினார். அவை கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என, அமைக்கப்பட்டது.

Default Image
Next News

அந்த தர்பார் ஹாலில் தரையை தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் ஓவியம் வரையப்பட்டன. இந்த ஓவியங்கள் தலைச்சிறந்த ஓவியர்களால் மூலிகைகள் மூலம் வரையப்பட்டுள்ளன. விஜயரகுநாத சேதுபதி குழந்தை பருவமே சந்தோஷமான காலம் என, கருதினார். இதனால் கருவறையில் ராமாயணத்தின் பாலகாண்டம் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் ராமனின் குழந்தை பருவ நடவடிக்கைகள் தத்துரூபமாக உள்ளன. அர்த்த மண்டபத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் குழந்தை பருவம் வரையப்பட்டுள்ளன. மகா மண்டப வடபகுதியில் விஷ்ணு அவதாரங்கள் உள்ளன.

தெற்கு பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேதுபதி மன்னரின் வணிக ஒப்பந்த காட்சிகள், அரசவை நிகழ்வுகள், மராட்டிய மன்னர்களுடனான போர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இவை 300 ஆண்டுகளை எட்டிய நிலையில் இன்றும் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. இவை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவற்றை தொல்லியல்துறை அகழ் வைப்பகமாக மாற்றி பாதுகாத்து வருகிறது. இவற்றை பார்வையிட பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் வருகின்றனர்.

காப்பாட்சியர் சக்திவேல் கூறுகையில், “தர்பார் ஹாலை ராமலிங்க விலாசம் என, அழைக்கின்றனர். இங்கு ஓவியங்களுடன் மன்னர்களின் போர் கருவிகள், தொல்பொருட்கள் வைத்துள்ளோம். இந்த ஓவியங்கள் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar