Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எமகண்டத்தில் ஜம்பு சவாரி துவக்கம்: ... கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் அடுத்த மாதம் நடை சாத்தப்படும்! கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரன் வதம் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரன் வதம் நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

24 அக்
2015
10:10

துாத்துக்குடி :துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.மைசூருக்கு அடுத்தபடியாக தசரா விழா குலசேகரப்பட்டினத்தில் சிறப்பாக நடக்கும். தசரா விழா அக்.13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.தினமும் முத்தாரம்மன் பல்வேறு கோலங்களில், பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இரவு 11.மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளினார். மகிஷாசூரன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதியில் காத்திருந்தான். அங்கு இரவு 12 மணிக்கு எழுந்தருளிய முத்தாரம்மன் முதலில் தன் தலையுடன் வந்த சூரனின் தலையை கொய்தார்.அதன் பின் சிங்கத்தலை, எருமைத் தலையாகவும், பின் சேவலாகவும் காட்சியளித்தான். அவனது தலைகளை கொய்து முத்தாரம்மன் வதம் செய்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் காளி வேடம், அம்மன் வேடம், என பல்வேறு மாறு வேடங்களுடன் வந்திருந்தனர். சூரனை வதம் செய்தபோது பக்தர்கள், திரண்டு ஆரவாரம் செய்தனர். முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை கோயிலுக்கு முத்தாரம்மன் வந்து சேர்ந்தார். இதனை தொடர்ந்து காப்புகளை பக்தர்கள் களைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar