Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா பூமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்! பூமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு வசதிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
11:07

ராமேஸ்வரம் : ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீர்த்தமாட வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆடிஅமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம்செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். நாளை (ஜூலை 30) அமாவாசைக்கு வழக்கம் போல் ராமேஸ்வரத்திற்கு தீர்த்தமாட வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்யவும் தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. நெருக்கடி இல்லாமல் வரிசையில் நின்று தீர்த்தமாடுவதற்கு வசதியாக தெற்கு மற்றும் கிழக்கு ரதவீதியிலும், தள்ளு முள்ளு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக முதல் பிரகாரத்திலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால், இந்தாண்டு அமாவாசைக்கு மதுரை,சிவகங்கை இணை கமிஷனர்கள், விருதுநகர், பரமக்குடி உதவி கமிஷனர்கள் மற்றும் 10 ஊழியர்களை ராமேஸ்வரம் கோயில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று இரவு முதல் கோயிலை சுற்றி நான்குரத வீதியிலும், நடுத்தெரு, சன்னதிதெரு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: கோயிலுக்குள் தீர்த்தமாட புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களும், பிரச்சனைகளும் தவிர்க்கப்படும். கோடி தீர்த்தம் பகுதியில் கேட் திறக்கப்பட்டதால் பக்தர்கள் இலகுவாக தீர்த்தமாடி திரும்புகின்றனர். தீர்த்தமாடி சுவாமிதரிசனம் செய்வதில் ஏற்படும் பிரச்சனை குறித்து புகார் செய்வதற்கு புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டள்ளது, என்றார். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளதால் வெளியூர் பக்தர்கள் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்களும், வர்த்தகர்களும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என ராமேஸ்வரம் தாசில்தார் கணேசன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar