பதிவு செய்த நாள்
27
நவ
2015
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, தங்க ரிஷப வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று முன்தினம் மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனம், வள்ளி தெய்வானை சமேத முருகர் மயில் வாகனம், அண்ணாமலையார் தங்க பெரிய ரிஷப வாகனம், உண்ணாமுலையம்மன் சின்ன ரிஷப வாகனம், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். நேற்றிரவு அய்யங்குளத்தில், சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை கண்டு தரிசனம் செய்தனர். இன்று (நவ.,27) அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்.