புதுமணத் தம்பதியர்களுக்கான சாந்தி முகூர்த்த நேரங்களைத் தீர்மானிக்க பலரும் முன் வருகிறார்கள். முதலிரவு சிறப்பாக இருந்தால் தான் குழந்தை பாக்கியம் முதல் கூடுதல் பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் எந்த எந்த நட்சத்திரத்தில் முதலிரவு வைக்க வேண்டும். எந்த நட்சத்திரத்தில் முதலிரவு வைக்கக்கூடாது. என்றும் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் காலற்ற நட்சத்திரங்களான கார்த்திகை, உத்ரம், உத்ராடம். உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், தலையற்ற நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முதலிரவு வைத்துக் கொள்ளக் கூடாது. தாரா பலம் பெற்ற நாளில் முதலிரவு அமைந்தால் ஜோரான குழந்தை பிறக்கும்.