கடலுார்: கார்த்திகை தீபத்தையொட்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கட லுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தையொட்டி மாலை 7:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் முருக ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சங்கு மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு விளக்கு மடக்கு வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், பாடலீஸ்வரருக்கு பெரியநாயகி, முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து தீபம் ஏற்றிய பின் கோவிலை வலம் வந்தனர். பி ன்னர் கோவில் மண்டபம் முன் பஞ்சமூர்த்திகளுக்காக அமைக்கப்பட்ட ஐந்து சொக்கபனை ஏற்றப்பட்டது. அதன் ரட்சையை பாடலீஸ்வரர் அணிவித்து, பொறி உருண்டை வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ராஜ வீதியுலா நடந்தது.