Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி பெருமாள் கோயிலில்"பகல் ... ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் 14ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்க காலத்திற்கு முந்தைய வணிக நகரம் ராமநாதபுரம் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சங்க காலத்திற்கு முந்தைய வணிக நகரம் ராமநாதபுரம் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

12 டிச
2015
10:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சங்க காலத்திற்கு முந்தைய வணிக நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.பழங்கால மக்கள் விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு, வியாபாரத்திற்காக ஆற்றங்கரை ஓரங்களில் கூட்டமாக வாழ்ந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வைகை நதி உருவாகி 256 கி.மீ., பயணித்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த நதிக்கரை ஓரங்களில் 293 இடங்களில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் அருகே வைகையில் இருந்து ஒரு கிளை நதி பிரிந்து சென்றுள்ளது. இந்த நதி வீரவனுார், லாந்தை, தாமரைக்குடி, புத்தேந்தல் வழியாக புல்லந்தை மங்களேஸ்வரி நகர் கடலில் கலந்திருக்க வேண்டும்.

இந்த நதிகரை ஓரத்தில் சங்ககாலத்திற்கு முந்தைய லாந்தை என்ற வணிக நகரம் இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக லாந்தை சந்தைவழிதிடல், தாமரைக்குடி பகுதியில் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை தொல்லியல் ஆய்வாளர் கீழக்கரை விஜயராமு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: லாந்தை நகரம் வணிகம், விவசாயத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக முதுமக்கள் தாழிகளின் எச்சங்கள், பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை வழுவழுப்பு இல்லாமல் மங்கி உள்ளதால் 4 ஆயிரத்திற்கும் முற்பட்டது. இந்த நகர மக்களின் முக்கிய தொழிலாக வணிகம் இருந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பகுதியை முழு அளவில் அகழாய்வு செய்தால் பல எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar