நாகர்கோவில்: இரையுமன்துறை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் அலங்கார தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. நிறைவு நாள் விழாவல் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆராட்டு கடவில் ஆராட்டு நடைபெற்று சுவாமி கோயிலுக்கு எழுந்தருளியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.