Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் பணியிடங்களை நிரப்ப ... ஏகாதசியை முன்னிட்டு நாமசங்கீர்த்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியில் தென்மாவட்ட போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2015
11:12

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தென் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடல், பொதுமக்கள் கூடும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படுகின்றனர். தென் மாவட்ட குற்றவாளிகள் போட்டோ அடங்கிய பட்டியலுடன் குற்றப்பிரிவு போலீசார் வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உள்ளனர்.

அனைத்து வாகனங்களும் பாம்பன் பாலத்திற்கு முன் சோதனை செய்த பின்னரே ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கப்படும். கும்பாபிஷேகத்திற்கான யாகபூஜை துவங்கும் ஜன., 15 முதல் கோயில் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது. பக்தர்களின் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நிறுத்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. கடலோரப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், மண்டபங்களில் சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரால் சோதனை செய்யப்படுகின்றனர் என, எஸ்.பி., மணிவண்ணன் கூறினார் கூடுதல் எஸ்.பி.,க்கள் இன்பமணி, வெள்ளைத்துரை உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar