Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்பெண்ணையாற்றில் ஆடி பெருக்கு ... புதுகையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாடியம்மன் கோவிலில் மதுஎடுப்பு கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2011
11:08

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவாக மது எடுப்பு விழா மிக கோலாகலமாக நடந்தது. ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மது எடுப்பு திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு நேற்று மாலை நான்கு மணியளவில் மது எடுப்பு விழா நடந்தது.இதில், ஆலங்குடி, பள்ளத்து விடுதி, ஆலங்காடு, கல்லலாங்குடி, காட்டுபட்டி, மேட்டுபட்டி மற்றும் இன்ன பிற பகுதி பொதுமக்கள் பலர் தங்களது நேர்த்தி கடனாக வேண்டிய நவதாணியங்கள் முளைப்பாரி, தென்னை பாளை ஆகியவற்றை குடத்தில் வைத்து மலர்கள் அலங்காரம் செய்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நடந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தங்களது பகுதியில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில்கள் வளரவும், திருமணமாகாத பெண்கள் நல்ல முறையில் வரன் அமையவும், குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்பத்தில் ஆரோக்யம் பெறவும் தங்களது கோரிக்கையை அம்மனிடம் வேண்டி தங்கள் காரியம் நிறைவேறிய பிறகும், சிலர் நிறைவேறவும் ஆயிரக்கணக்கான பெண்கள் மது எடுப்பு விழாவில் பங்கேற்றனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை ஸ்ரீநாடியம்மன் நிறைவேற்றுவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் இக்கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன. இதில், பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar