பதிவு செய்த நாள்
24
டிச
2015
12:12
கோத்தகிரி: கோத்தகிரி பேரகணி கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு, பக்தர்களின் வசதிக்காக, கட்டணமில்லா பஸ் இயக்கப்பட்டது. படுகர் இனமக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, ஆண்டுதோறும் நடக்கிறது. பேரகணியில் நடந்த திருவிழாவுக்காக, மாநில அரசு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தது. இவ்விழாவில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் கலாச்சார உடையணிந்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு சென்ற, பக்தர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், ஐந்து கட்டணமில்லா சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தவிர, அந்த பஸ்களில் பயணிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அம்மா குடிநீர் பாட்டில்களும் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. அ.தி.மு.க., பாசறை மாவட்ட செயலாளர் வினோத், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் வாப்பு, ஊட்டி நகர செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, மாவட்ட பாசறை செய்திருந்தது.