பரமக்குடி: எமனேஸ்வரத்தில் இருந்து சபரிமலைக்கு 33 ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து குருசாமிகள் சேஷய்யன், மோகன், நாகராஜன் ஆகியோரது தலைமையில் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சவரிமலை சென்றனர். இவர்கள் தொடர்ந்து 17 நாட்கள் நடந்து சவரிமலையை அடைகின்றனர். யாத்திரையானது எமனேஸ்வரம் தொடங்கி, பரமக்குடி, அருப்புக்கோட்டை, இருக்கன்குடி, ஏழாயிரம்பண்ணை, திருவேங்கடம், சங்கரன்கோயில், பன்புலி, அச்சன்கோயில், எருமேலி வழியாக சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.