கும்பகோணம்: சாரங்கபாணி கோயிலில் மகாமக விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
கும்பகோணம் மகாமக விழாவின் இரண்டாவது நாளான இன்று (பிப்.14ல்) காலை, சாரங்கபாணி கோயிலில் காலை 8.45 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜை பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.