பதிவு செய்த நாள்
22
பிப்
2016
12:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்களின் சிவ சிவ கோஷம் வின்னதிர இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் கடந்த 13ம் தேதி மகாமகம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் இதுவரை ஏறத்தாழ 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. தீர்ததவாரி தொடக்கமாக 12 சைவ கோயில்களிலும், 5 வைணவ கோயில்களிலும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து முன்னதாக 12 சைவ கோயிலிகளில் இருந்து உற்சவர்கள் வீதி உலாவாக புறப்பட்டு, மகாமக குளத்தில் உலா நடைபெற்றது. தொடர்ந்து 12.00 மணிக்குமேல் சுவாமி தீர்த்தவாரி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகர கோஷம் வின்னதிர சுவாமியை தரிசனம் செய்து, புனித நீராடினர். அதே சமயம், 5 வைணவ கோயில்களின் உற்சவர்கள் வீதி உலாவாக புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி காணும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பலத்த பாதுகாப்பு: தீர்த்தவாரி திருநாளான இன்று(பிப்.,22ல்) 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட சுமார் 2,000 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய மாணவர் படை (என்.சி.சி.), நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) உள்ளிட்டவற்றை சேர்ந்த மாணவர்களும் கூட்டத்தை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாமகக் குளத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபங்கள், கரையில் நிற்கும் வாகனங்கள், பொருள்களில் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்கள் குளித்திற்கு வரும் வழிகளில் 25 இடங்களில் தனிவழி அமைக்கப்பட்டு குளத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை ஏற்பவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தனி கட்பாட்டு அறை அமைக்கப்பட்டு 400 சி.சி.டிவி., கேமார மூலம் கண்கானிக்கப்பட்டும் வருகிறது. 100 மத்திய சிறப்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனார்.