கீழக்கரை:திருப்புல்லாணி அருகே வைரவன் கோவில் கிராமத்தில் கூனி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு பிப்.,19ல், கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம், மற்றும் பரிவார தெய்வங்களின் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 16ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை மூலஸ்தான கோபுர கலசம், ராஜகோபுர கலசம், பரிவாரமூர்த்திகள் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து கூனி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வைரவன் கோவில் பக்தர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.