திருப்பரங்குன்றம் வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 02:02
திருப்பரங்குன்றம்: விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. காலை யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர், உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.