பதிவு செய்த நாள்
22
பிப்
2016
02:02
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எ.என்.யு.டி., மஹாலில், உலக நன்மைக்காகவும், உடல் நோயால் அவதிப்படுகிறவர்கள் பூர்ண குணமடையவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், பணம் மற்றும் கடன் பிரச்சனை தீர்வது உட்பட பல பிரச்சனைகள் தீர மகா யக்ஞம் ஹோமம் நடத்தப்பட்டது.
நவ நரசிம்ஹ சாமி, மஹா சுதர்சன, லஷ்மி ஹயக்ரீவ , மஹா லட்சுமி, வித்யா சரஸ்வதி ,
தன்வந்திரி, நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டது. மதுரை நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட யாகத்தை ஸ்ரீதர்பட்டர் தலைமையில் வேத விற்பனர்கள் ஹோமத்தை நடத்தினர். முன்னதாக, மஹாயக்ஞம் ஸங்கல்பம், பூர்ணாகுதி நடந்தது. பஜனை மற்றும் கல்வியாளர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில், பங்கு கொண்டவர்களுக்கு மஹாயக்ஞ பிரசாதம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஹயகிரீவ வித்யா சரஸ்வதி யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட பேனா, பென்சில், ஸ்கேல், குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டது.