தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2016 05:03
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று இரவு10 மணிக்கு முதல்கால அபிஷேக பூஜை துவங்கியது.இதில் தர்பையில் முளைத்த சுயம்புவான தர்ப்பாரண்யேஸ்வரர், செண்ப தியாகராஜர். பிரணாம்பிகை அம்பாள்,சனிஸ்வர பகவான் ஆகியோருக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடந்தது. காலை 10.30மணிக்கு பிரணாம்பிகை அம்பாள் சமேதராக தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அரும்பாலித்தார். பின் தெற்குவீதி, வடக்குவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.