Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ... பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை பூஜை! பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
12:03

இடையகோட்டை: இடையகோட்டை அருகிலுள்ள வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இடையகோட்டை வலையபட்டியில் ராயர்குல வம்சம் குரும்பா இன  மக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி உற்சவ விழா 4 நாள்கள் கொண்டாடப்படும்.  இதன் முக்கிய நிகழ்ச்சியாக அமாவாசை அன்று அம்மனை வேண்டி வரம் கேட்கும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். நேற்றைய விழாவில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில், கோயில் பூஜாரி பூஜப்பன் தேங்காய்களை உடைத்தார்.  முன்னதாக அதிகாலை குலகுருக்கள் புனிதநீர் தெளித்து சக்தி அழைத்து வந்து பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைக்கப்பட்டது.

இன்று (மார்ச் 9) பொங்கல் விழா நடைபெறும். மாலை அம்மன் இடையகோட்டை சென்று மஞ்சள் நீராடி அரண்மனையில் பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். பல மாவட்டங்களில் இருந்து திரளானோர் கோயிலுக்கு வந்திருந்தனர். வடமதுரை: வடமதுரை ஒன்றியம் ஜி.குரும்பபட்டி எல்லம்மாள் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஒருநாள் உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி தண்ணீர்துறைக்கு சென்று வழிபாடு முடித்து, பக்தர்கள் கோயிலுக்கு  வந்தனர். விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன்பாக வட்டமாக அமர்ந்தனர். பூசாரி பழனிச்சாமி தன் பாதத்தில் ஆணிகளுடன் கூடிய மரக்கட்டை காலணியுடன் அவர்களை ஒருமுறை வலம் வந்தார். இரண்டு ஈட்டிகளால் தனது வயிற்றில் மாறி, மாறி குத்தியபடி வழிபாடு நடத்தினார். வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் சேர்வைக்காரர் தவமணியிடம் ஒரு சாட்டையடி பெற்று கொண்டு கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டபடி இருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar