Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புவனகிரி பகுதியில் மயானக் கொள்ளை ... அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் வரும் ஜனவரியில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2016
11:03

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் 2017 ஜனவரியில் நடைபெறும், என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். கன்னியாகுமரி கடற்கரையில் இந்த கோயில் கட்ட விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கியது. இதில் கட்டுமான பணிகள் நடக்கிறது. வெங்கடாஜலபதி மூலஸ்தானம் கட்டும் பணி தற்போது நடக்கிறது. இங்கு வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி பூதேவி, கருடபகவான் சன்னதிகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுவது சிறப்பானது. திருப்பதியில் மலையில் அருள்பாலிக்கிறார். இங்கு கடற்கரையில் அருள் பாலிப்பார். கட்டுமான பணிகள் தீவிரமாக நடக்கிறது. 2017 ஜனவரியில் பொங்கலுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி வரும் பக்தர்களில் 30 முதல் 40 சதவீதம் பக்தர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.அதனால்தான் தமிழகத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இங்கு திருமலையில் நடப்பது போல் சுப்ரபாதம், ஊஞ்சல் சேவை, திருக்கல்யாணம், பிரம்மோற்சவம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருமலையில் தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர். ஐந்து லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு பக்தருக்கு அதிகபட்சமாக நான்கு லட்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar