Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தடை நீக்கும் திருவதிகை ... சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவில் சிற்பங்கள் சொல்லும் வரலாறு!
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவில் சிற்பங்கள் சொல்லும் வரலாறு!

பதிவு செய்த நாள்

12 மார்
2016
11:03

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில், பல்வேறு வகை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன; கடல் கடந்த வணிகத்தில், அன்றே கொங்கு மண்டலம் சிறப்புற்றிருந்ததை, சிற்பங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. பழந்தமிழர்கள், கடல் கடந்து வணிகம் மேற்கொண்டனர். கொடுமணல், கல் மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள், ரோமானிய நாணயங்கள் கிடைத்தது போன்றவை, இதற்கு உதாரணமாக கூறலாம். விஸ்வேஸ்வரர் கோவிலில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், பழந்தமிழரின் கடல் வணிகம் தொடர்பான சிற்பங்களாக உள்ளன. கோவிலின் தெற்கு கோபுர மண்டப தூண்களில், சீன வணிகர்கள், யாத்திரீகர்கள் வந்து சென்றதை குறிக்கும் வகையில், சில சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அம்மனின் மகிஷாசுரமர்த்தினி அவதார சிற்பம் ஒன்றும் முன்மண்டப தூணில் உள்ளது. ஆக்ரோஷ ரூபியாக, பல கரங்களுடன் அரக்கனை அன்னை வதம் செய்யும் காட்சி, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில், கோவில்களில் நாட்டியமாட ஏராளமான பெண்கள் இருப்பர்; அதில், தலைமை நாட்டிய பெண்ணை, தலைக்கோலி என்று அழைப்பர். அத்தகைய தலைமை நாட்டிய பெண்ணின் சிற்பம் ஒன்றும், விஸ்வேஸ்வரர் கோவிலில் பார்க்க முடிகிறது. இது, நாட்டியக்கலைக்கு ஆலயங்கள் அளித்து வந்த முக்கியத்துவத்தை, வெளிப்படுத்துகிறது.

இக்கோவில் சிற்பங்களின் மற்றொரு சிறப்பம்சமாக, கோவில் மணி மாடம் அமைந்துள்ளது. கோவிலின் இடதுபுறத்தில், கால பைரவர் சன்னதிக்கு வெளியே, முன்மண்டபத்தில், மணி மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கல் மண்டப மேற்கூரையில் இருந்து உயரமாக, நான்கு தூண்களுடன், தனி கல் மண்டபம் போலவே உள்ளது. மணி மாடத்தில், பெரிய அளவிலான மணி உள்ளது. கோவில் உற்சவ பூஜை காலங்களில், இந்த மணி ஒலிக்கிறது. பழமையான இக்கோவில் மணியும், அதன் பிரமாண்ட மண்டபமும், விஸ்வேஸ்வரர் கோவிலின் பழமைக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. கோவிலில் பழமை மாறாதவாறே, தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar