Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோயில் இடிப்பு பக்தர்கள் ... கொந்தகை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா கொந்தகை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் நம்மாழ்வார் மோட்ச வைபவம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் நம்மாழ்வார் மோட்ச வைபவம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2026
11:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது.


மார்கழி மாதத்தையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் உற்சவ சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் முதல் நடந்து வருகின்றன. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் முத்தங்கி சேவையில் மூலவப்பெருமாள் காட்சியளித்தார். தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலை வலம் வருதல், ஆழ்வார்கள் பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (11ம் தேதி) கூடார வல்லி நிகழ்ச்சி நடக்கிறது. 


* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாளை (11ம் தேதி) கூடார வல்லியையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஆண்டாளுக்கு பெருமாள் திருமண வரம் அளித்த நாளான அன்று, திருமணத்துக்காக காத்திருக்கும் ஆண், பெண் தங்கள் ஜாதகத்தை நகலெடுத்து கோவிலில் கொண்டு வந்து வைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், மார்கழி சிறப்பு வழிபாடும், நம்மாழ்வார் மோட்ச வைபவமும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar