பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நாளை காலை, 5:00 முதல், 6:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவ ங்குகிறது. ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நாளை காலை துவங்கி, வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் முக்கிய விழாவாக, நான்காம் நாள் வெள்ளி இடப வாகனம் ஆறாம் நாள் வெள்ளித்தேர், மறுநாள் தேர்த்திருவிழா, 10ம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் மூன்றாம் நாள் உற்சவத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, விநாயகர், முருகர், சின்ன காஞ்சிபுரம், காந்தி சாலையில் இரவு எழுந்தரு ள்வார்கள். மற்ற நாட்களில், நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைவார். தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும்.