பதிவு செய்த நாள்
15
மார்
2016
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று காலை 8.00 மணிக்கு கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. பின் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் கொடிக்கம்பத்தில் பங்குனித் திருவிழா கொடியேற்றினர்.
கம்பத்தின் அடியில், பால் உட்பட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தன. செல்லப்பா சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர் பாலமுருகன், ஹைடெக் அராய் நிறுவன பி.ஆர்.ஒ., சண்முகசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா நாட்களில் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார். திருக்கல்யாணம்: மார்ச் 19 இரவு 8.00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி, மார்ச் 20 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 21ல் காலை கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, 22ல் பச்சைக் குதிரை ஓட்டம், 23ல் பங்குனி உத்திரம், 24ல் சூரசம்ஹாரம், 25 ல் பட்டாபிஷேகம், 26ல் திருக்கல்யாணம், 27ல் தேரோட்டம், 28ல் தீர்த்த உற்சவம் நடக்கும்.