Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவிலில் ... கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணாரியில் குண்டம் திருவிழா கோலாகலம்: லட்சத்துக்கும் மேற்பட்டோர் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2016
12:03

பண்ணாரி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் புகழ் பெற்ற, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழக - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இக்கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம் பெருந்திருவிழா, கடந்த, 7 ம் தேதி இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மன் உலா புறப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பி, கடந்த, 15ம் தேதி இரவு, திருக்கம்பம் சாற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. நேற்று இரவு, 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், சப்பரத்தில் அம்மனை தூக்கி, திருக்குளம் சென்று அம்மன் அழைத்தல், வரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, 3.50 மணிக்கு திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்து, மலர், கனிகளை வானத்தில் இறைத்து, பூசாரிகளும், சப்பரத்துடன் அம்மனை அழைத்துக் கொண்டு கோவில் ஊழியர்களும் குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, பக்தர்கள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த நான்கு நாட்களாக வரிசையில் காத்திருந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், குழந்தையுடன் தாய்மார்களும், மாற்றுத்திறனாளிகளும் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.

ஒரு அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட குண்டத்தில், நேற்று மதியம் ஒரு மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து, பசு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் இறங்கின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கியதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில், 400க்கும் மேற்பட்ட போலீசார், கோவில் ஊழியர்கள், தனியார் அமைப்பினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இருந்தும், 24 பக்தர்கள் தீயில் விழுந்தும், பலத்த தீக்காயம் அடைந்தும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றனர்.

* இந்தாண்டு, குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதால், பக்தர்களின் காயத்துக்கான செலவு, பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா, வழக்கம்போல, இந்தாண்டும் குண்டம் இறங்கினார்.
* சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் எம்.பி., சத்தியபாமா ஆகியோர், காலை, 5.50 மணிக்கு சிறப்பு வழியில், கட்டப்பட்டிருந்த கட்டைகள் வழியாக புகுந்து வந்தனர். நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடந்த நிலையில், சில நிமிடங்களில் குண்டம் இறங்கி, சிறப்பு தரிசனம் செய்து, பிரசாதம் வழங்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர். அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
* அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டும், சத்தியமங்கலத்தில் இருந்து, பல ஊர்களுக்கு உடனடியாக செல்ல பஸ்கள் இல்லாமல், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் பரிதவித்தனர்.
* இவ்விழாவில், இன்று மதியம், 12 மணிக்கு மாவிளக்கும், இரவு, 10 மணிக்கு புஷ்பரதமும், 24ம் தேதி காலை மஞ்சம் நீராட்டும், 25ம் தேதி மாலை, 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், இரவு, 7 மணிக்கு தங்கரதம் புறப்பாடும், 28 ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar