Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வேலுடையான்பட்டு முருகர் கோவிலில் ... பங்குனி உத்திர உற்சவம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! பங்குனி உத்திர உற்சவம்: காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி கோவில் பங்குனி உத்திர திருவிழா; ஆகம விதி மீறியதாக பக்தர்கள் வாக்குவாதம்
எழுத்தின் அளவு:
வடபழனி கோவில் பங்குனி உத்திர திருவிழா; ஆகம விதி மீறியதாக பக்தர்கள் வாக்குவாதம்

பதிவு செய்த நாள்

24 மார்
2016
11:03

வடபழனி முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், ஆகம விதி மீறப்பட்டதாக, கோவில் நிர்வாகத்துடன் பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி, 10 நாட்கள் திருவிழா நடக்கும். அதில், ஆறு நாட்கள் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு, 20 முதல், 22ம் தேதி வரை, மூன்று நாட்கள் மட்டுமே லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. அதிலும், பங்குனி உத்திரத்தன்று லட்சார்ச்சனையை, கோவில் நிர்வாகம் நீக்கி விட்டது. இதுகுறித்து, நேற்று பக்தர்கள் கோவில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தசரதபுரம், மேற்கு மாம்பலம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து, 4 ஆயிரம் பால் குடங்கள் எடுத்து வரப்பட்டன. நேர்த்திக்கடன் செலுத்த, 200க்கும் அதிகமான காவடிகள், வடபழனி கோவிலுக்கு வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சன்னிதி தெருவில், பக்தர்கள் கோவிலுக்கு வரிசையாக செல்ல தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. காவடி பால் குடம் வந்த நேரத்தில், கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தவில்லை. காவடி மற்றும் பால் குடங்களை கோபுர வாசல் வழியாக அனுமதிக்காமல், மேற்கு வாசல் வழியாக அனுப்பினர். குறுகிய வழியில், பெரிய காவடிகள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட, நேற்று செய்து கொடுக்கப்படவில்லை. கட்டண தரிசனத்தில் சென்றவர்களை அனுமதித்து, இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். பால்குட காவடியோடு, பக்தர்களையும் ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar