செஞ்சி:செல்லபிராட்டி கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. செஞ்சி அருகே உள்ள செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு லலிதா செல்வம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா அபிஷேகம், கலச நீர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 10:00 மணிக்கு விளக்கு பூஜையும், 10:30 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், 11:00 மணிக்கு, ஜோதி தரிசன மகாதீபாரதனை நடந்தது. இதில், அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.