Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைகள் கூடினால் காரியம் கைகூடும் சென்னையில் ஆறுபடை வீடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சென்னை ஐயப்பன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
05:08

சபரிமலையை ஐயப்பன் கோயிலைப் போலவே சென்னை அம்பத்தூரிலும் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தில் கணபதி, பாலமுருகன், நாகர், மாளிகைபுரத்து அம்மன், கடுத்த சுவாமி, கருப்பண்ணசாமி ஆகியோருக்கு தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. வருடந்தோறும் கொடியேற்றத்துடன் துவங்குகிற விழாவில், பள்ளிவேட்டை, ஆராட்டு விழா, உத்ஸவருக்குப் புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியன சிறப்புற நடைபெறும்.  இங்குள்ள ஐயப்பனை தரிசிக்க தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்து மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வார்கள். கார்த்திகை மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும், மற்ற மாதங்களில் முதல் மற்றும் கடைசி ஞாயிறுகளிலும் அன்னதானம் நடைபெறுகிறது. ஜனவரி 14 -ஆம் தேதியன்று, சுற்றியுள்ள பல கோயில்களுக்குத் திருவாபரணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மாலையில் ஐயப்ப ஸ்வாமிக்கு திருவாபாரணம் சாற்றி, கற்பூர ஜோதி தரிசனம் நடைபெறும். இதேபோல், மாளிகைபுரத்து அம்மனும் சக்தி வாய்ந்த தேவியாகப் பெண்களால் போற்றப்படுகிறாள். சன்னதியின் வெளிச் சுற்றில் உள்ள கம்பியில் மூன்று தேங்காய்களைக் கட்டிவிட்டு, தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தரிசித்துப் பிரார்த்திக்க, திருமணத் தடை அகலும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும் தட்டு ஒன்றில், பச்சரிசியைப் பரப்பி, இரண்டு தேங்காய்மூடிகள் வைத்து, அவற்றில் நெய் தீபமேற்றி சாஸ்தாவை வழிபட... இளைஞர்களுக்கு நல்ல வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாதவர்கள் இங்குள்ள ஐயப்பனை மனதார வழிபட்டுச் செல்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar