பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
குரு, ராகுவால் நன்மை கிடைக்கும். சந்திரனும் அவ்வப்போது நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. ஏழரை சனியின் இறுதி கட்டத்தில் இருப்பதால் உழைப்பால் உயர்வு பெறுவீர்கள். பொருளாதாரம் ஏறுமுகமாக இருக்கும். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை பெரியோர்வசம் ஒப்படைத்தால் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் பொன், பொருள் சேரும். சூரியனால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளை உடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். அறிவைப் பயன்படுத்தி முன்னேற்றுவது நல்லது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். மே 3,4ல் எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். பணியாளர்கள் குருவால் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. ஏப். 15,16 மே 12,13 ஆகிய நாட்கள் சிறப்பாக அமையும்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை ஏப். 25 க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் குருவால் சிறப்பான நிலையை அடைவர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடைச் செல்வம் பெருகும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர்.சுய தொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஏப்.27,28 ல் புத்தாடை நகைகள் வாங்கலாம். மே 5,6,7-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: ஏப்.15,16,17,18,22,23,27,28, மே 3,4,5,6,7,12,13
கவன நாள்: மே 8,9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்: 2,6 நிறம்: மஞ்சள்,சிவப்பு
வழிபாடு: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வழிபடுங்கள். புதனுக்கு தினமும் நீராடியதும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.