பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
11:04
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலின் மேல், மீண்டும் விமானம் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், திருமலை ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள, சேஷாசலம் மலை பகுதியின் மேல், விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என, திருப்பதி தேவஸ்தானம், மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஏழுமலையான் கோவிலின் மேல் வான்வெளியில், விமானம் பறப்பது, ஆகம விதிக்கு எதிரானது என, பண்டிதர்கள், கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு, இதற்கு பதிலளிக்காமல், மவுனம் சாதித்து வருகிறது. நேற்று காலை, ஏழுமலையான் கோவில் முன்வாசல் கோபுரத்தின் மேல், விமானம் பறந்து சென்றதால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.