வேம்பத்தூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்: வரும் 29ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2016 11:05
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரில் சுந்தரராஜப் பெருமாள் அமைந்துள்ளது. இக்கோயிலில், பூமி நீளா சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் திருக்கல்யாண மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
29.5.2016-ஞாயிற்றுக்கிழமை- திருக்கல்யாணம்
காலை: 6.00 மணி- விஸ்வரூப தரிசனம் காலை: 8.00 மணி- பெருமாள் காசியாத்ரை புறப்பாடு காலை: 8.30 மணி- பெருமாள் தாயார் மாலை மாற்றுதல், கண்ணூஞ்சல் காலை: 10.00 மணிமுதல்-திருக்கல்யாண உத்ஸவம் மதியம்: 12.30 மணி- திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி, பிரசாத விநியோகம்
தங்களின் பெயர், நட்சத்திரம் எழுதியனுப்பினால் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலய திருப்பணிக் கமிட்டி, வேம்பத்தூர், சிவகங்கை மாவட்டம்-630 559. செல்: 97915 83169