Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ... அட்சய திரிதியை முன்னிட்டு காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்! அட்சய திரிதியை முன்னிட்டு காலடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலஞ்சேரி அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் விழா!
எழுத்தின் அளவு:
ஆலஞ்சேரி அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் விழா!

பதிவு செய்த நாள்

09 மே
2016
10:05

உத்திரமேரூர்:ஆலஞ்சேரியில் அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.ஆலஞ்சேரியில் அவ்வையாருக்கு கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூழ்வார்த்தல் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதன்படி இந்த ஆண்டு, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சனிக்கிழமை காலை ஆலஞ்சேரியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அபிஷேகம் நடந்தது. நேற்று மலரால் அலங்கரிக்கப்பட்ட அவ்வையார் வீதிகளில் ஊர்வலமாக வந்த போது, தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். பிறகு, மாலை, 3:00 மணிக்கு அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் விழா நடந்தது. ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள நுாற்றுக் கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பசி போக்கிய கிராமம்:உத்திரமேரூர் அடுத்துள்ள ஆலஞ்சேரி கிராமத்தில் அவ்வையார் கோவில் உள்ளது. அவ்வையார் வாழ்ந்த காலத்தின்போது, அவர் ஒரு முறை மதுரையில் இருந்து, காஞ்சியை நோக்கி சிவனின் புகழ் பாடி வந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம், ஆலஞ்சேரி கிராமத்தை அவ்வை கடந்த போது, தண்ணீர் தாகத்தால் தவித்ததாகவும், அவ்வையை அரவணைத்து, கூழ் கொடுத்து, அவர் பசியை சிலர் போக்கியதாகவும் நம்பப்படுகிறது. தன் பசியை போக்கிய மக்களை அவ்வையார் வாழ்த்தி பாடியதாகவும், இதனால் அவ்வையாரின் ஆசி பெற்ற ஊராக ஆலஞ்சேரி என, விளங்குவதாகவும் அப்பகுதி வாசிகள் நம்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar