செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் கோபால வினாயகர், பெரியாயி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை ஆலய வளாக உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.