பதிவு செய்த நாள்
13
மே
2016
10:05
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது.உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வசந்த மண்டபம் சென்றனர். மைய பகுதி மேடையில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தனர். மே 21 அதிகாலை 5.00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7.00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு வரும் குடங்களில் இருக்கும் பால், சுவாமிக்கு மதியம் 2.00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும்.மே 22 காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மொட்டையரசு திடலில் எழுந்தருள்வர்.