Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ... பழநியில் வைகாசி விசாக விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்! பழநியில் வைகாசி விசாக விழா கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2016
05:05

பரமக்குடி: பரமக்குடி அருகே திருமருதுõர் என்னும் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், வைகாசி வசந்த உற்சவ திருவிழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழாவானது, மே 12 ல் காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் இந்திர விமானம், வெள்ளி நந்தி, அன்ன, பூத, சிம்ம, யானை, ரிஷபம், கைலாசம், கிளி, குதிரை சேஷ, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிவலம் வந்தனர். இதனையடுத்து (மே 20) காலை 8.30 மணிக்கு மேல் சுவாமி பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அதனை தொடர்ந்து சவுந்தர்யநாயகி அம்மன் மறு தேரிலும் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் சிவ, சிவ கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் மதியம் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. விழாவினையொட்டி பரமக்குடி, எமனேஸ்வரம், ஜீவாநகர், நயினார்கோவில் ஆகிய பல இடங்களில் பக்தர்களின் வசதிக்காக நீர், மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர். விழாவில் நயினார்கோவில் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் மகேந்திரன், சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar