பதிவு செய்த நாள்
27
மே
2016
12:05
திருப்பதி: திருமலையில், பாதயாத்திரை பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளுடன், தனி காத்திருப்பு அறையை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், ஏப்., மாதம், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்களுக்காக, அவர்களின் முக்கிய பொருட்கள், காலணி, மொபைல் ÷ பான் பாதுகாப்பு மையம், குடிநீர், கழிப்பிட வசதிகளுடன் கூடிய, தனி அறையும் தேவஸ்தானம் சார்பில் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்களிடம் வர÷ வற்பு கிடைத்ததால், பாதயாத்திரை பக்தர்களுக்கு, தனி காத்திருப்பு அறை ஏற்படுத்தவும், தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருமலையில், ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் சந்திக்கும் இடத்தில், இந்த காத்திருப்பு அறைகள் அமைய உள்ளன. பிரசாத லட்டின் தரம் குறைய õமல் இருக்க, பயன்படுத்திய, பயன்படுத்தாத நெய்யின் தரத்தை பரிசோதிக்கவும், பக்தர்களுக்கான வாடகை அறைகள் விவரத்தை பக்தர்கள் எளிதாக அறிய, புதிய ‘ஆப்’ ஒன்றை வடிவமைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.