திருவாடானை: திருவாடானை அருகே கிளியூர் வாழையம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. கிளியூர், கோடனுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால், பறவை காவடிகள் எடுத்துவந்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.