சாயல்குடி: கடலாடி ஒன்றியம் தேவர்குறிச்சி தர்ம முனீஸ்வரர் கோயிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று விநாயகர் வழிபாடு, பூர்ணாகுதி நடைபெற்று 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.