கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் வேத விநாயகர்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையெ õட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்ப வலம்புரி சங்கு பூஜை, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது. 8:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 10:00 மணிக்கு விசேஷ மகா அபிஷேகம், ஆதராதனையும்; 11:00 மணிக்கு தீபாராதனை, யாத்ராதானம், 108 சங்காபிஷேகம் மற்றும் நவகலச யாகம் நடந்தது. 12:00 மணிக்கு அலங்கார தீபாராதனையும்; இரவு 7:00 மணிக்கு வேத விநாயகர் சுவாமி வீதியுலா நடந்தது.