Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் ... 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் பட்டினப் பிரவேசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2011
11:09

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜீயரிடம் ஆசி பெற்றனர். உலக நன்மைக்காகவும் புழு, பூச்சிகள் முதல் அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் நலமுடன் இருக்க சன்னியாசிகள் மேற்கொள்ளும் விரதம் சாதுர்மாஸ்ய விரதம் ஆகும். சன்னியாசிகள் ஏதேனும் ஒரு புண்ணிய ஸ்தலத்தில் தங்கி விரதம் மேற்கொள்வர். இதன்படி, ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஜீயர் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் கடந்த ஜூலை 15ம் தேதி சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கினார். இரண்டு அமாவாசை, இரண்டு பவுர்ணமி முடித்து நேற்று ஜீயர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். ஜீயர் சுவாமிகள் முன்னதாக நித்தியாராதன மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடத்திய பின்னர் பிடித்து வைத்த மண் சட்டியை நீரில் கரைத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். ஜீயர் விரதத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு ஜீயர் மடத்தில் வேத பாராயணங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து ஜீயர் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று ஸ்ரீலெட்சுமிநரசிம்மரை தரிசித்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சார்பில் மாலை பரிவட்டம் போன்ற மரியாதை செய்யப்பட்டது. இதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஜீயர் சுவாமிகள் அமர வைக்கப்பட்டார். ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் பட்டின பிரவேசமாக அழைத்துச் செல்லப்பட்டார். சித்திரை, உத்திர வீதிகள் வழியாக ஜீயர் சுவாமிகள் வடக்குவாசலில் உள்ள மடத்தினை அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar