பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
11:07
விக்கிரவாண்டி: தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவியில், மிகப் பழமைவாய்ந்த, கைலாச நாதர் திருக்கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று காலை 10 மணிக்கு, விநாயகர், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், சிவகாமி உடனுறை நடராஜர் பெருமானுக்கு இளநீர், பால், தயிர், மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந் தது. பின், சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.முன்னதாக, சிவனடியார் மாலதி தலைமையில் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தொரவி ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சங்கர், வழக்கறிஞர் சம்பத்,ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந் தனர்.