கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது அருங்கரை அம்மன் கோயில். இங்கு அம்மனுக்கு நைவேத்யம் தயாரிக்கும் அடுப்பிலிருந்து சேகரிக்கப்படும் சாம்பலே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது. நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது இந்த சாம்பல் பிரசாதம். இக்கோயிலுக்கு குதிரைபொம்மைகள் செய்து வைத்து வழிபட்டால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.