ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், ஆனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 7 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 8 ம் தேதி இரவு 7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, நந்தி வாகன வீதியுலா நடந்தது. தொடர்ந்து 8 நாட்கள் ராவ÷ னஸ்வரர், பூதம், ரிஷிபம், யானை உள்ளிட்ட வாகனங்களில் இரவு சுவாமி வீதியுலாவும், 9ம் நாள் மதியம் 3:30 மணிக்கு, தேர்த் திருவிழாவும் நடக்கிறது.