வீராபுரம்;வீராபுரம் கிராமத்தில், சக்தீஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் கிராமத்தில் சக்தீஸ்வர் அம்மன் கோவில் உள்ளது. இங்கு, மஹா கும்பாபிஷேக விழா, 12ம் தேதி, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, சக்தீஸ்வரி அம்மன் மற்றும் விமானத்திற்கு புனித நீருற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.