Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொரத்தூர் பூவாத்தம்மன் கோவிலில்108 ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவானை துதித்தால் நல்வழி பிறக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2016
12:07

கோவை: கோவை, காளப்பட்டி நேரு நகரில் அமைந்துள்ள, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நடந்த பக்தி சொற்பொழிவில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், கஜேந்திரமோட்சம் என்ற தலைப்பில் பேசியதாவது:ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது, கஜேந்திரமோட்சம். புரந்தரதாசர், கபீர்தாசர், தியாகராஜர் என மகான்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக, அதற்கான கீர்த்தனைகளை வடிவமைத்துப் பாடியுள்ளனர். கம்ப ராமாயணத்தில், ஆறு காண்டங்களிலும், கம்பர், கஜேந்திர மோட்சத்தை, வெவ்வேறாக பிரித்து பொருள் படுத்தியுள்ளார். தண்ணீரில் உள்ள முதலையிடம் யானை அகப்பட்டுக்கொண்டது. தண்ணீரில் முதலைக்கு பலம், நிலத்தில் யானைக்கு பலம், அப்போது ஆதிமூலமே என்னை காப்பாற்று என்று யானை அலறியதும், சுவாமி நாராயணன் காப்பாற்றுகிறார்.நம் உடலில் உள்ள பஞ்சேந்திரியம் என்ற முதலையிடம், இல்லறக்கடலில் அகப்பட்டுள்ளோம். நம்மை நாம் நல்வழிப்படுத்திக்கொண்டு, பகவானை அடைய நாமும், யானையை போன்று, பகவானை துதிக்க வேண்டும். அப்போது நமக்கு நல்வழி பிறக்கும், வாழ்க்கை சிறக்கும். இவ்வாறு கல்யாணராமன் பேசினார். இன்று, பிரகலாத சரித்திரம் குறித்து, மாலை 6:00 மணிக்கு துவங்கி, 8:00 மணி வரை, திருச்சி கல்யாணராமன், சொற்பொழிவாற்றுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar