பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
12:07
திருப்போரூர்:கண்ணகப்பட்டு, மடம் தெருவில் உள்ள, வேலாயுத தீர்த்த குளத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளதுதிருப்போரூர் பேரூராட்சி, கண்ணகப்பட்டு மடம் தெருவில், சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்டதாக கூறப்படும் வேலாயுத தீர்த்த குளம் உள்ளது. பக்தர்களால், புண்ணிய தீர்த்தமாக கருதப்படும், பழமை வாய்ந்த இக்குளம் சிதிலமடைந்துள்ளது. குளத்தின் சுற்றுச் சுவர்கள் உடைந்தும், படிகளில் பாசிகள் நிறைந்தும், குளத்தின் உள்ளேயே மண்மேடுகள் உருவாகியும், படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வரும், கழிவு நீர் இக்குளத்தில் கலந்து, கருமை நிறத்தில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட, நிர்வாகத்தினர், இக்குளத்தை பார்வையிட்டு, சீர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.