முந்தி பிடித்த முத்தாலம்மன் கோவில் தீமிதி திரு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2016 12:07
படப்பை : படப்பை அடுத்த, நரியம்பாக்கம் கிராமத்தில் முந்தி பிடித்த முத்தாலம்மன் கோவிலின், 16வது ஆண்டு, தீமிதி திருவிழா நேற்று முன் தினம் நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ்வார்த்-தலும், கத்தி ஏறுதலும் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில் விரதமிருந்த நூற்-றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து நேர்த்திகடன் செலுத்-தினர். சால மங்கலம், படப்பை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி-களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு வழி பட்டனர்.