Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடித் திருக்கல்யாண திருவிழா: ... திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம் :ஆக.5ல் தேரோட்டம் திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடத்தும் ஆந்திரா!
எழுத்தின் அளவு:
தமிழக கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடத்தும் ஆந்திரா!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
11:07

வேலுார்: தமிழக-த்திடம் இருந்து ஆந்திரா அபகரித்த கனக நாச்சியம்மன் கோவிலில், வரும், 2ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக  நடத்த,  அம்மாநில அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லையில், புல்லு ாரில் உள்ள  தடுப்பணையை ஆந்திர அரசு உயர்த்தி கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வ ருகின்றனர்.

கைப்பற்றியது: இந்த தடுப்பணை அருகே, கனக நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது, 50 ஆண்டு களாக தமிழக அறநிலையத்துறை கட்டு ப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. தடுப்பணை விவகாரத்தை  அடுத்து, இந்த கோவிலை ஆந்திர மாநில அறநிலையத்துறை கைப்பற்றியது.

வசூல் நடத்த...: முதற்கட்டமாக, இந்த கோவிலுக்கு வரும் வாகனங்களிடம், சுங்க வசூல் நடத்த ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ÷ காவிலில் இருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு, ஆந்திர மாநில மின் வாரியம் சார்பில், இணைப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு  முன், இந்த கோவில் நிர்வாகத்துக்கு, 13 பேர் கொண்ட அறங்காவலர்களை, ஆந்திர அறநிலையத்துறை நியமித்தது. அதில்,  ஏழு பேர் தமிழகத்தைச்  சேர்ந்தவர்கள்.

முதல்வர் பங்கேற்கிறார்: இந்நிலையில், கனக நாச்சி யம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா, ஆகஸ்ட், 2ம் தேதி  நடைபெறும் என்று ஆந்திர மா நில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  இதில்,  குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்பார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மின்  வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில்  இருப்பர் என்று அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர். பி ரச்னைக்குரிய கோவில் திருவிழாவுக்கு, ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்க வருவது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar