Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி கொடியேற்றம்! இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2016
04:08

சின்னாளபட்டி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு திரு வி.க.,நகர் சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர்வரிசை ஊர்வலம், 7 வகை சாத படையலுடன் அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. சின்னாளபட்டி 4வது வார்டு திரு.வி.க.நகரில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி கலய ஊர்வலமும், ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் விசேஷமாக நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான ஆடிப்பூர திருவிழா காலை, சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது.

Default Image
Next News

கோயிலில் இருந்து குங்குமம், பச்சரிசி, மஞ்சள்கிழங்கு, மஞ்சள் வண்ண புடவை, வளையல், வாழை, மாம்பழம், சப்போட்டோ, கொய்யா, பேரீட்சை உள்ளிட்ட பலவகை  பழங்கள், கற்கண்டு, கருப்பட்டி, எண்ணெய் பதார்த்தங்கள் போன்ற சீர்வரிசைகளுடன், பாரதிநகர் விநாயகர் கோயிலுக்கு சென்றனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் முன்பு, கர்ப்பிணி, குழந்தை, திருமண வரம் வேண்டும் பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அம்மனுக்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தக்காளி, தயிர், எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் போன்ற 7 வகை சாதங்கள் படையலிடப்பட்டது. விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு வளையல் பூட்டுதல் நடந்தது. கர்ப்பிணி பெண்கள் முகத்தில் சந்தனம் பூசி, வளையல் அணிவித்து குருக்கள் இளையராஜா வளைகாப்பை துவக்கி வைத்தார். கோயில் முன்பு அமர்ந்திருந்த பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. வளைகாப்பு இட்ட பெண்களுக்கு, 7 வகை சாதங்கள் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, வளையல், தாலிக்கயிறு, மஞ்சள்கிழங்கு, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar